×

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 464 பேர் பாதிப்பு: 495 பேர் குணம்; 04 பேர் பலி…சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 261 (8,42,261) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,42,261 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,25,520 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,387 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 1; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 143 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,32,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,64,39,856 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 51,613 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 4,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,08,997 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 269 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,33,230 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 195 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு  திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 254 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 186.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* சண்டிகர்-1.* புதுச்சேரி-1.* ஜார்கண்ட்-1.* பீகார்-1.* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.*UK-1. …

The post தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 464 பேர் பாதிப்பு: 495 பேர் குணம்; 04 பேர் பலி…சுகாதாரத்துறை அறிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Corona ,Tamil Nadu ,Health Department ,Chennai ,
× RELATED ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று...